பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்தார் என்று மந்திகை மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.
பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இடத்தைச் சேர்ந்த ஜசன் ஆனந்த் (வயது -17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
சிறுவன் கிணற்றில் தவறி வீழ்ந்து சில மணி நேரத்தின் பின்பே அவரை கிணற்றிலிருந்து மீட்ட உறவினர்கள் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.