ஆஸ்திரேலியாவில் அசத்திய தமிழ் மாணவியின் வரலாற்று சாதனை..! கொண்டாடும் தமிழ் மக்கள்..! நீங்களும் வாழ்த்தலாமே..!!

ஆஸ்திரேலியாவில் தமிழ் மாணவி ஒருவர் படைத்த சாதனை கொண்டாடப் பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா மெல்பேர்ணை வசிப்பிடமாக கொண்ட கெங்காசுதன் என்பவரின் மகளான பிரியங்கா ஆஸ்திரேலியாவில் நடத்தப் படுகின்ற VCE என்ற உயர்தர பரீச்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்றே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சொந்த நாட்டை விட்டு புலம்பெயர் நாடு ஒன்றில் வாழும் தமிழ் பெண்ணான பிரியங்கா 50 புள்ளிகளில் 50 புள்ளி அதாவது முழுமையான மதிப்பெண்கள் எடுத்தே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இது வரை நடந்த VCE பரீச்சை வரலாற்றில் தமிழ் மொழி பரீச்சையில் பிரியங்கா மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். இது வரை எந்த ஒரு தமிழ் மாணவர்களும் செய்யாத சாதனையை பிரியங்கா செய்ததால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது..!!