அரச ஊழியர்களுக்கு பெரு மகிழ்ச்சியான செய்தி!

அரசுக்கு சொந்தமான சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர்களுக்கான 2019 ஆம் ஆண்டுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்ப்ல் அமைச்சர்களுக்கான அனைத்து செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் தலைவர்கள் தொடர்பாக திறைசேரி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 2018 ஆம் ஆண்டின் நிதி அறிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த மேலதிக கொடுப்பனவுகளை வழங்குமாறும் நிதியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.