கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கிய கொழும்பிலிருந்து சென்ற பேருந்து

கிளிநொச்சி பளை-கரந்தாய் பகுதியில் கொழும்பிலிருந்து சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இவ்விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு பளைப் பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.