A/L பெடியனுடன் கள்ளக் காதல்: குழந்தை பிரசவித்து கொலை செய்து ரசித்த காதலன் – மன்னாரில் சம்பவம்!

மன்னார் பேசாலை பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல மெக்கானிக் ஒருவரின் A/L படித்த சகோதரனுடன் ஏற்படுத்திக்கொண்ட கள்ளக் காதல் காரணமாக கர்ப்பமடைந்து குழந்தை பிரசவித்து அக்குழந்தையை பிறந்த சில நிமிடங்களில் கோரக் கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

குறித்த பெண்ணின் கணவர் நீண்டகாலமாக வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் குறித்த பெண் பேசாலையில் உள்ள வாகனங்கள் திருத்தும் கராஜுக்கு தனது மோட்டார் சைக்கிளை திருத்துவதற்காக பல தடவைகள் சென்று வந்த சமயங்களில் அந்தக் கராஜ் உரிமையாளரின் தம்பியுடன் நட்பாக பழகியுள்ளார்.

சிறிது காலம் சென்றபின்னர் அந்த நட்பு இருவரிடமும் காதலாக மாறியதை அடுத்து இருவரையும் தவறான நடவடிக்கைகளுக்கு தூண்டியுள்ளது. இதன் காரணமாக இருவரும் பல சந்தர்ப்பங்களில் தவறாக நடந்துகொண்டதன் விளைவாக குறித்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.

குறித்த கர்ப்பத்தை அழிப்பதற்கு இருவரும் முயற்சி செய்தும் பலனளிக்காமையால் குறித்த பெண் தனது வீட்டிலிருந்து அக்குழந்தையை பெற்றெடுத்து சில மணி நேரம் கழித்து அக்குழந்தையை அருகிலுள்ள பற்றைக்குள் கொண்டு சென்று கொலை செய்து குழியில் புதைத்துள்ளார்.

குழந்தை பிரசவித்த தாக்கத்தால் குறித்த பெண் மயக்கமடைந்தமையால் மன்னார் வைத்தியசாலைக்கு அவரது உறவினர்களால் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் மயக்கத்திற்கான காரணத்தை அப்பெண் மறைத்துள்ளார். மருத்துவர்கள் குறித்த சம்பவத்திற்கு குழந்தை பிரசவித்தமையே காரணம் என்றும் அது தொடர்பாக தகவல்களை கூறும்படியும் வலியுறுத்தியதையடுத்து அப்பெண் உண்மையை உழறியுள்ளார்.

இதனையடுத்து வைத்தியசாலை நிர்வாகம் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த பெண் பொலிசாரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.