யாழ்ப்பாணம் சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் புகையிரத கடவையை கடக்க முயற்சித்த கார் ஒன்றின்மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கார் பொறுப்பற்ற முறையில் புகையிரத கடவையை கடக்க முயற்சித்த போது கொழும்பிலிருந்து வந்த புகையிரதம் காரை மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் மயிரிழையில் காயங்களுக்குள்ளான நிலையில் உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.