தேனீ மூலம் யானையை விரட்டும் முயற்சி வெற்றி

தேனிவளர்பினூடாக காட்டு யானைகளைத் தடுக்கும் செயற்பாடு வெற்றியடைந்துள்ளன என ஆனைகட்டியவெளி கிராம மக்கள் இன்று தெரிவிக்கின்றனர்.

காட்டுயானைகள் கிராமத்தினுள் வராமல் இடப்பட்டுள்ள தேனீ வளர்ப்புச் செயற்பாட்டினால் அந்தப் பகுதியூடாக கிராமத்தினுள் உட்புக வந்த காட்டு யானை திரும்பிச் சென்றுள்ளது.

இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளுக்கு அந்தக் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.