மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

வட்டக்கொடை தெற்கு மடக்கும்புர குடியிருப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்தார்.

பெரியண்ணன் கிட்ணசாமி (வயது-67) என்ற வயோதிபரே உயிரிழந்தார்.

மின்சாரத் துண்டிப்பை ஏற்படுத்தாமல் வீட்டுத்தோட்டத்துக்கு சென்றபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.