உயர்தர வகுப்பு மாணவி செய்த முகம் சுழிக்கவைக்கும் செயல்!

மாத்தளையிலுள்ள முன்னணி பெண்கள் பாடசாலையின் உயர்வகுப்பு மாணவியொருவர், பாடசாலைக்கு மதுபானம் கொண்டு சென்ற நிலையில் வசமாக சிக்கியுள்ளார்.

இந்நிலையில் மாணவியிடம் மதுபானம் இருந்ததை அவதானித்த ஆசிரியர் அதனை பறிமுதல் செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய, ஒழுக்காற்று விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.