உயிரிழந்த கர்ப்பிணி மனைவி… கணவர் செய்த நெகிழ வைக்கும் செயல்..!

வேலூரில் உயிரிழந்த தனது மனைவியின் இதயத்தை, தானமாக வழங்கிய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் கவுதம்ராஜ். இவரது மனைவி கோகிலா.

இந்நிலையில், கோகிலா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென்று உடல்நிலை குறைவால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில், இருந்த கோகிலாவிற்கு வலிப்பு ஏற்பட்டதால் கடந்த 7 ஆம் திகதி அறுவை சிகிச்சை மூலம் பெண்குழந்தை பிறந்தது.

ஆனாலும் கோகிலா உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு கோகிலா மூளைச்சாவு அடைந்தார்.

அவரின் உடல் உறுப்புக்களை தானம் செய்யும் படி அவரது கணவர் கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் இன்று கோகிலாவின் இதயம் மற்றும் கல்லீரல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறு மலர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மனைவியின் இதயத்தை கணவர் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது.