வாழைப்பழத்தில் விஷம் வைத்து காதலியை கொலை செய்த இளைஞர்.. அதிர்ச்சி தரும் காரணம்..!

கும்பகோணம் பகுதியில் வாலிபர் ஒருவர் காதலிக்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் நந்திவனம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகளின் பெயர் தமிழ்(20). தமிழ் கும்பகோணத்திலுள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கும்பகோணத்தில் கோபிநாத பெருமாள் கோவில் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த முனியன். மகனின் பெயர் ஐயப்பன். ஐயப்பனின் வயது 26. ஐயப்பனுக்கும் தமிழுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களாக தமிழுக்கும், ஐயப்பனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். அப்போது, தமிழின் நடவடிக்கைகளை சந்தேகித்து ஐயப்பன் நேராக அவர் பணிபுரியும் துணி கடைக்கு சென்றுள்ளார்.

தமிழை சேஷம்பாடி என்னுமிடத்திற்கு ஐயப்பன் அழைத்து சென்றுள்ளார். தன்னிடம் பேசாதது பற்றி ஐயப்பன் தமிழிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறில், இருவரும் தற்கொலை செய்துகொள்வதாக முடிவெடுத்துள்ளனர். அதன்படி, ஐயப்பன் வாழைப்பழத்தில் எலி மருந்தை வைத்து, முதலில் தமிழை சாப்பிடுமாறு கூறியுள்ளார். தமிழும் வாழைப்பழத்தை சாப்பிட்டு மயக்கம் அடைந்துள்ளார். இதனால் பதறிய ஐயப்பன் தற்கொலை எண்ணத்தை கைவிட்ட நிலையில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில், தமிழின் உறவினர்களுக்கு தகவல் கிடைக்க்க, அவர்கள் உடனடியாக அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது தமிழ் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்பு, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் தமிழை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தமிழின் உறவினர்கள் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதற்காக தமிழை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். இந்த சம்பவமானது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.