தென்னிலங்கையில் சற்று முன்னர் கோர விபத்து – வெளிநாட்டவர் நால்வர் பலி

தென்னிலங்கையில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .