யாழ்ப்பாண நகர் பகுதியில் வர்த்தகரொருவர் உள்ளிட்ட இருவர் திடீர் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் வர்த்தகரொருவர் உள்ளிட்ட இருவர் திடீரென இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் நாட்டின் ஜனாதிபதியினால் அரிசியின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட பின் விலைக் கட்டுப்பாட்டு சோதனை பிரிவினரால் நாடு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் சத்திரத்து சந்திக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு பொலிஸார் மற்றும் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அங்கே விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை தொடர்பாக அதிகாரிகளால் கேட்கப்பட்டபோது வர்த்தக உரிமையாளர் மிகவும் மோசமான முறையில் விலை நிர்ணய அதிகாரிகளை பேசியுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது இதுகுறித்து அந்த அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பின் அந்த இடத்திற்கு யாழ்ப்பாண பொலிஸார் வரவழைக்கப்பட்டு வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவருடைய சகா என இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.