கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் லொஸ்லியா…. ரசிகரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த இளைஞர்களையும் கட்டிப்போட்ட பெண் போட்டியாளர் என்றால் அது இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா தான்.

கவினைக் காதலித்து வந்த லொஸ்லியா பின்பு தந்தையின் கண்டிப்பால் சிறிது அமைதியாக இருந்தார். பின்பு கவினுடன் மீண்டும் பேச ஆரம்பித்தார். லொஸ்லியாவிற்காக கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது இடத்தினைப் பிடித்தார் லொஸ்லியா. கவின், லொஸ்லியா இருவரும் வெளியே வந்த பின்பு தங்களது காதலைக் குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

ஆனால் லொஸ்லியாவின் தந்தை 1 வருடத்திற்கு பார்க்காமல், பேசாமல் இருக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளதால் தங்களது காதலை நிரூபிக்க இருவரும் மௌனம் காத்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்றைய தினம் கிறிஸ்துமஸ் என்பதால் ரசிகர் ஒருவருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். ரசிகரும் கேக்கை லொஸ்லியாவிற்கு ஊட்டியுள்ளார். இதனை அவதானித்த மற்ற ரசிகர்கள் கடுப்பானதுடன், இதற்கு பல கருத்துக்களையும் வெளியிட்டுள்ளனர்.