க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில் வர்த்தகப் பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவானந்தம் ரகுராஜ் எனும் மாணவரே இவ்வாறு சாதனையை படைத்துள்ளார்.
குறித்த மாணவன் யாழ்.மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் நூற்று ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளார்.







