சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு பிரபல ஊடகத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம்.
இரண்டு பேரும் கனவன் மனைவியாக இருந்தாலும் பாடல் பாடி போட்டி போட்டு தங்களது திறமையை உலகிற்கு நிரூபித்து வந்தனர்.
அடுத்தடுத்த இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறது.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் அண்மையில் நடந்த விருது வழங்கும் நிகழ்வில் இருவருக்கும் ஒரே விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இருவரின் திறமைக்கு மட்டும் அல்ல காதலுக்காகவும் இந்த விருது ஒன்றாக வழங்கப்பட்டுள்ளாதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இது குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.