ராஜித சேனாரட்ன கைது! வைத்தியசாலையிலிருந்து அழைத்துச் செல்லும் குற்ற புலனாய்வு பிரிவினர்

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்ற புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய ராஜித ராஜித தொடர்ந்து அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன் அவர் சிகிச்சை பெறும் வைத்தியசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிந்திய தகவலின்படி ராஜித சேனாரட்ன கைது செய்யப்பட்டு வைத்தியசாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ராஜித கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.