யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பரிதாப மரணம்! மக்களே அவதானம் ..

மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கிருஸ்ணள் ஜீவாதரன் என்ற யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார உதவியாளர் டெங்கு நோயின் தாக்கத்தால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மழை நீர் பல இடங்களில் தேங்கியுள்ளதால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது எனவே வீடுகள் பொது இடங்களை துப்பரவாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயின் தாக்கத்தை தடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என கூறப்படுகிறது.