கிளிநொச்சியில் பயங்கரம் : வெட்டு காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி மலையாளபுரம் புதுஐயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பாரிய வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மலையாள புரத்தைச்சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்கினேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.