புண்களில் புழுக்கள் காணப்பட்ட நிலையில் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு மாடுகளை கம்பளை பிராந்தியத்துக்குப் பொறுப்பான விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர் பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த திங்களன்று அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரசியத் தகவல் ஒன்றின் அடிப்படையிலே குறித்த மாடுகள் கைப்பற்றப்பட்டன.
கைபற்றப்பட்ட மாடுகளில் பாரிய காயங்கள் காணப்படுவதோடு மாடுகளில் காணப்படும் புண்களிலிருந்து புழுக்களும் வெளிவருவதாகவும் அதிரடிப்படையினர் தெரிவித்ததுள்ளனர்.
அத்துடன் , கைப்பற்றப்பட்ட மாடுகளை கம்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்த நிலையில் காயங்களுக்குள்ளான மாடுகளில் ஒன்று நேற்றுக் காலை உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதான சந்தேக நபரை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.