நாட்டில் மாட்டிறைச்சி வாங்குவோர் கவனத்திற்கு! முக்கியமான தகவல்

புண்­களில் புழுக்கள் காணப்­பட்ட நிலையில் இறைச்­சிக்­காக கொண்டு செல்லப்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் நான்கு மாடு­களை கம்­பளை பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான விசேட அதி­ர­டிப்­ப­டையினர் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இது தொடர் பில் சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வ­ரை கைது செய்­துள்­ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கடந்த திங்களன்று அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கு கிடைக்­கப்­பெற்ற இர­சியத் தகவல் ஒன்றின் அடிப்­ப­டை­யிலே குறித்த மாடுகள் கைப்­பற்­றப்­பட்­டன.

கைபற்றப்பட்ட மாடு­களில் பாரிய காயங்கள் காணப்­ப­டு­வ­தோடு மாடுகளில் காணப்படும் புண்­க­ளி­லி­ருந்து புழுக்­களும் வெளி­வ­ரு­வ­தாகவும் அதி­ர­டிப்­ப­டை­யினர் தெரி­வித்­த­துள்ளனர்.

அத்துடன் , கைப்­பற்­றப்­பட்ட மாடு­களை கம்­பளை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­தி­ருந்த நிலையில் காயங்­க­ளுக்­குள்­ளான மாடு­களில் ஒன்று நேற்றுக் காலை உயி­ரி­ழந்­துள்­ள­தாகவும் தெரிய வருகி­றது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதான சந்­தேக நபரை கம்­பளை மாவட்ட நீதி­மன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.