போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழ் நகரில் கையெழுத்துப் போராட்டம்!!

ஜ.நா பாதுகாப்பு சபை தலையிட்டு இலங் கையை சர்வதேச குற்றவியல் பொறி மு றையை அமுல்படுத்தகோரி தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில பொது அ மைப்புக்கள் இணைந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கையைழுத்து போரா ட்டத்தை நடத்தியுள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்கு மேற்படி கையெ ழுத்து போராட்டம் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதன்போது “இலங்கை போர்குற்ற விவகாரம் தொடர் பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு நியாயதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஜ.நா பாதுகாப் பு சபை நிறைவேற்றவேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கையெழுத்து போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு கையொ ப்பமிட்டுள்ளனர்.