புகையிரதத்தில் பயணிப்போருக்கு இன்று முதல் மகிழ்ச்சியான செய்தி

புகையிரத பயணிகளுக்கு குறைந்த விலையில் மரக்கறி பொதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று பிற்பகல் 2 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இன்று இவை ஆரம்பிக்கப்படும் என புகையிரத சேவைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது புகையிரத பயணிகளுக்கு 10 வகை மரக்கறிகளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.