யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வைத்து கஞ்சா போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆர். பிரதிப்க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபரிடமிருந்து 200 கிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் நாவற்குழி பகுதியைச் சேர்நத 39 வயதுடையவர் என பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் சந்தேக நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.