வடமராச்சியில் சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

பருத்தித்துறை பொற்பதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தில் பிரதேச மக்கள் தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர்.இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு செய்வதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்துள்ள நிலையில், இன்று அதிகாலை 3 டிப்பர் களில் மண் ஏற்றுக்கொண்டு செல்லப்பட்டுள்ளது.இரண்டு டிப்பர் வாகனங்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒரு வாகனத்தின் சாரதி இணையும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பிரதேச மக்களுக்கும் மணல் கொள்ளையர்களுக்கு ம் இடையில் பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .