புங்குடுதீவில் பாவனையற்ற கிணற்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர் . போலீஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குழந்தை பிறந்து 2 நாட்கள் இருக்கும் என கூறும் போலீசார் ,மீட்கப்பட்ட சடலத்தில் இருந்து தொப்புள் கொடியும் காணப்படுவதாக உறுதிப்படுத்தினர் .கொலை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் அது கிணற்றில் போடப்பட்ட இருக்கலாம் என்று தெரிவித்த போலீசார் ,யூரியா பையுடன் வேறு வேறாக கலண்ட நிலையில் நிலையில் சடலம் காணப்பட்டதாக தெரிவித்தனர் .இன்று காலை குறித்த பகுதிக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் மலஜலம் கழிக்க சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை கண்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார் .இதன் போது அழுகிய நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது .சம்பவ இடத்துக்கு வந்த ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தட அறிவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டனர் .ஹரினம் குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் தாய் கைது செய்யப்பட வில்லை.குறித்த சிசுவின் சடலம் தொடர்பில் புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதிக்கு பொறுப்பான மருத்துவ மாது மற்றும் பொது சுகாதார சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .குறித்த பெண் தொடர்பில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .மேலும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .