காதலர்கள் நினைவுச்சின்னமாக மாறும் மந்திரிமனை கவனிக்குமா மாநகரசபை. மக்கள் ஆதங்கம்

காதலர்கள் நினைவுச்சின்னமாக மாறும் மந்திரிமனை…. கவனிக்குமா! மாநகரசபை.

யாழ்ப்பாணப் பெரும் இராச்சியத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலியன் என்றும், வீரம், கட்டுப்பாடு, வரலாற்று முக்கியத்துவம் இப்படியெல்லாம் கொண்டாடிய மண்ணின் வரலாற்று அடையாளத்தின் அங்கமான மந்திரிமனையின் இன்றைய நிலை கண்டு வருந்துவதா? சினம் கொள்வதா?

தற்போது எந்தவொரு பராமரிப்பு தரப்பினரின் பார்வையும் இன்றி சமூகப் புரள்வுக்கு கைகுடுக்கும் தளமாக மாறி வருகிறது தமிழரின் அடையாளச்சின்னமான மந்திரிமனை.

ஆம், காதலர்கள் தனிமையில் இருந்தமைக்கான சுவடுகளை மந்திரிமனை சுவர்கள் தாங்கி நிற்கின்றது.

இதற்கிடையில் கடந்த காலத்தில் மந்திரிமனை காணி உரிமை கோரி தனிநபர் வழக்கு தொடர்ந்தார் என்ற விடயமும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது