அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என அனந்தி சசிதரன் கோரிக்கை

நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக சிறையில் இருக்கும் அனைவரையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்தனர்.

இன்றைய தினம நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருணா அம்மான் என்பவர் இன்று சுதந்திரமாக வெளியில் தெரிகின்றார் எனினும் அவரின் கீழ் செயற்பட்ட இளைஞர் யுவதிகள் இன்றும் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளார்கள்.

எனவே இது ஒரு கவலைக்குரிய விடயமாகும் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறித்திரிந்த அரசாங்கம் கூட இந்த கைதிகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

எனவே தற்போது ஆட்சியில் உள்ள ஆட்சியாளர்கள் இந்த அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய முன்வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.