கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

கிளிநொச்சி திருநகர் தெற்கு பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மங்களநேசன் விஜயகுமார் என்ற இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தனது வாழ்வாதாரத்தை கருத்தில் மாட்டுப் பண்ணை மற்றும் விவசாயம் என அன்றாட தொழிலாக மேற்கொண்டு வந்த நிலையில் மாட்டுப் பண்ணையில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் கிணற்றில் போடப்பட்டிருந்த மோட்டாரில் மின் ஒழுக்கு ஏற்பட்ட காரணத்தினால் விபத்து இடம்பெற்றுள்ளது.

மின்சாரம் தாக்கிய இளைஞனின் உடல் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.