யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் 2 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு தேடுதல் மூலம் கஞ்சாவுடன் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றத்தில் முற்படுத்த வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்கள்