காலையில் டக்ளஸுக்கு எதிராக போராட்டம்..! மாலையில் அவருடன் விருந்து…யார் தெரியுமா?

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்க ஒருங்கிணைப்பாளா் தாக்கப்பட்டதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்னா் டக்ளஸ் தேவானந்தா மீது கடுமையான குற்றச்சாட்டு க்களை முன்வைத்து போராட்டம் ஒன்று ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக நடைபெற்றிருந்தது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது யாழ்.மாவட்ட சங்கத்தின் தலைவி என அடையாளப்படுத்தியவர் ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னா் போராட்டம் நடத்தியவர்கலுடன் இணைந்திருந்தார்.

அத்துடன் இந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய மேற்படி சங்க தலைவி அதன் பின்னா் யாழ்.நகரில் இடம்பெற்ற போராட்டம் ஒன்றிலும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த மற்றும் ஈ.பி.டி.பியின் முக்கியஸ்த்தா்கள் சிலருடன் இருந்து உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் செயலுக்காக பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.