மகளைக் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்கள் கொலைவெறித்தனமாக தாக்கியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது ஏ. புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜு(24) என்பவர் சேகர் என்பவரது மகள் ரேகாவை(24) காதலித்து, இரண்டு வீட்டாரின் எதிர்ப்பினை மீறி சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
திருமணம் செய்து கொண்ட இவர்கள் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடைக்குச் சென்ற ராஜுவை, ரேகாவின் தந்தை மற்றும் சகோரர்கள் கடைக்குள் புகுந்து சரமாரியாக தாக்கிய சிசிடிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.