வெளிநாட்டிலிருந்து வந்த மகள்… நள்ளிரவில் அனுமதி கொடுக்காத தந்தை! பரிதாபமாக உயிரிழந்த சோகம்

தோழியின் தந்தையில் இறுதிச்சடங்கிற்கு தந்தை அனுமதியளிக்காததால் இளம்பெண் ஒருவர் விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி சுந்தர்ராஜ். இவரது மகள் பிரியா(24) துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் துபாயில் தன்னுடன் வேலை செய்த தோழியின் தந்தை இறந்துவிட்டார். தோழியின் தந்தை இருப்பது சென்னையில் என்பதால் தான் இறுதிச் சடங்கிற்கு செல்ல வேண்டும் தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார்.

நள்ளிரவில் அவ்வளவு தூரம் தனியாக செல்ல வேண்டாம் என்று தந்தை மறுப்பு கூறியதால், மனமுடைந்த பிரியா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். சிறிது நேரத்தில் வாயில் நுரைதள்ளியதால் பதறிப்போன பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதித்த சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.