கார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

வெலிமடை – போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் பொரலந்தையைச் சேர்ந்த 63 வயதுடைய நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கண்டியிலிருந்து பொரலந்தைக்கு சென்று கொண்டிருந்த காரொன்றே போகஹகும்புரவில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவர் பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த சாரதி, நித்திரை கொண்டமையே குறித்த விபத்திற்கு காரணம் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் போகஹகும்புர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.