பேச மறுத்த காதலி!.. கழுத்தை அறுத்த காதலன்- பட்டப்பகலில் நடந்த துயரம்

கேரளாவில் பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த பெண் தற்போது தன்னிடம் பேசாததால் நபர் ஒருவர் சோடா போத்தலால் காதலியை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள பகுதி காரக்கோணத்தில் வசித்து வருபவர் ஆஷிகா(19). இவர் பியூட்டிஷன் கோர்ஸ் படித்திருக்கிறார்.

இவர் அதே பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுனரான அனு-வை காதலித்து வந்துள்ளார். பள்ளிப்பருவத்திலிருந்தே தொடர்ந்த இவர்களது காதல் சமீபத்தில் வீட்டிற்குத் தெரியவரவே ஆஷிகாவை கண்டித்து அனுவுடன் பழகுவதை பெற்றோர்கள் நிறுத்தியுள்ளனர்.

பெற்றோரின் பேச்சைக் கேட்டு அனுவுடன் பேசுவதை நிறுத்தியதையடுத்து, அனு பல வழிகளில் தொந்தரவு செய்துள்ளார். இதனால் இவர்களின் பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றுள்ளது.

சம்பவத்தன்று பாட்டியுடன் வீட்டிலிருந்த ஆஷிகாவை வீடு புகுந்து தான் வைத்திருந்த சோடா போத்தால் கழுத்தை அறுத்துவிட்டு, பக்கத்து அறைக்குச் சென்று தானும் கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ளது.