வகுப்பறையில் மாணவிக்கு ஆசிரியர் ஒருவரால் நேரவிருந்த கொடூரம்!

வட தமிழீழம், வவுனியா செட்டிகுளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் மாணவியுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவியின் உறவினர்கள் பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் கூறிய முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவர் நன்னடத்தை அதிகாரி பொலிஸில் முறைப்பாடு கொடுத்ததன் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

குறித்த ஆசிரியர் பிரபல தமிழ் கட்சி ஒன்றின் தீவிர செயற்பாட்டாளர் என கூறப்படுகின்றது.