சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடியாக ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது 16 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பிலான முக்கிய புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல் தொடுத்தலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பேட்டி ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தகவல் தெரிவித்திருந்தார்.
இதேவேளை தற்போது ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் அமெரிக்க வீரர்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றது.
எனினும் குறித்த புகைப்படங்கள் தொடர்பிலான உண்மைத்தன்மைகள் எவையும் இதுவரை வெளியாகாத நிலையில் அதனை ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள் உயிரிழந்த இராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.