திருமணமாகி 30 ஆண்டுகளாக குழந்தை இல்லை!.. ஒன்றாக இறந்த தம்பதி- நெஞ்சை உருக்கும் சம்பவம்

தமிழகத்தில் மனைவி இறந்த செய்தியை கேட்டதும் கணவரும் உயிரைவிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

முத்துப்பேட்டைக்கு அடுத்த ஓவரூர் கிராம் சோதிரியம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 60), இவரது மனைவி இந்திரா(வயது 55), திருமணமாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லை.

ஒருவருக்கொருவர் அன்பு செலுத்து வாழ்ந்து வந்துள்ளனர், உறவினர் வீட்டு விசேஷம் என எதுவானாலும் இருவரும் ஒன்றாக சென்று வருவதும் வழக்கமாம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்திராவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் நாகராஜ் கண்முன்னே இந்திரா காலமானார், இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ் மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவர்கள் பரிசோதித்ததும் அவர் இறந்தது தெரியவந்தது, இதனையடுத்து இருவரின் சடலத்தையும் வாங்கி வந்த உறவினர்கள் ஒன்றாகவே அடக்கம் செய்தனர்.

சாவில் கூட இணை பிரியாமல் கணவன்- மனைவி காலமானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.