2ம் வகுப்பு மாணவனை மலக்கழிவு அள்ள வைத்து அரங்கேறிய கொடுமை… ஆசிரியருக்கு வழங்கப்பட்ட அதிரடி தண்டனை

நாமக்கல் மாவட்டத்தில் 2ம் வகுப்பு படிக்கும் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் பள்ளில் 2ம் வகுப்பு படித்த மாணவரை மனித கழிவை அள்ள வைத்ததாக கடந்த 2015ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் காலனியை சேர்ந்த வீராசாமி மகன் சசிதரன். அப்போது அங்குள்ள நகராட்சி பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை 3 மணியளவில் சக மாணவர் ஒருவர் வகுப்பறையில் மலம் கழித்துள்ளார். அதனை வகுப்பு ஆசிரியர் சசிதரனை மிரட்டி அள்ள வைத்துள்ளார்.

வெறும் கைகளால் அள்ளியதை மாணவன் பெற்றோர்களிடம் கூறியுள்ளதையடுத்து,பெற்றோர் கொடுத்த புகாரையடுத்துதற்போது நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கப்பட்டது. தீர்ப்பில் சம்பந்தப்பட்ட ஆசிரிருக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.10000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.