யாழ் தபால் நிலையத்தில் தபால் அதிபராக கடமையாற்றி வரும் தபால் அதிபர் பமய்ங்கி வீழ்ந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.
காய்ச்சல் மற்றும் வயிற்றோடடம் காரணமாக மயங்கி வீழ்ந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலாலி வீதி கந்தர்மடத்தை சேர்ந்த சுப்பிரமணியம் சற்குணதேவா(வயது48) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு கடந்த ஒரு வாரமாக வயிற்றோடடம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் சுகயீனம் அடைந்திருந்த அவர், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் அவருக்கு நேற்று காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் வீட்டில் மயக்கம் அடைந்து வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






