இயக்கச்சியில் அதிரடிப்படையினரிடம் சிக்கிய பெண்!

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினா் நடாத்திய திடீா் சோதனையின்போது 2 கிலோ 100 கிராம் அளவுள்ள கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளார்.

இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் நடமாடுவதாக பளை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைத்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்னை கைது பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணையை பளை பொலீசார் மேற்கொண்டு வருவதுடன் முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண் கிளிநொச்சியை சேந்தவர் எனவும் பளை பொலீசார் கூறினார்.

மேலும் குறித்த பெண் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடையவா் எனவும் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.