யாழில் பெரும் பரபரப்பு! தனக்கு தானே தீ மூட்டி தொடருந்து முன் பாய்ந்த நபர்!

யாழ்.கொடிகாமம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான இராஜசுந்தரம் இராஜசீலன் வயது 32 என்ற குடும்பஸ்தரே இன்று காலை 7.00 மணியளவில் கொடிகாமம் பகுதியில் தொடருந்தின் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பருத்தித்துறையில் நேற்று முன்தினம் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த குடும்பஸ்தரை பொலிஸார் தேடியிருக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த சந்தேக நபர் தன்னைத் தானே தீ மூட்டி தொடருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் இன்று காலை தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தொடருந்துடன் மோதுவதற்கு முன்பாக தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.