கூரிய ஆயுதத்தினால் தாக்கி உறவினரை கொலை செய்த நபர்

கண்டி – நெகத்கும்புர பிரதேசத்தில் கூரிய ஆயுததத்தினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் நேற்றிரவு ஏற்பட்ட தகராறு முற்றியத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெகத்கும்புர – மெனிக்கின்ன பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் உறவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.