அண்மையில் தத்துவப் பிரியானந்தாவின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.
அதில், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அடுத்த காணொளி வெளியிடுவதற்குள் நான் உயிரோடு இருப்பேனோ, இல்லையோ எனத் தெரியவில்லை என்றும், தத்துவ பிரியானந்தா கதறுவது போல காட்சிகள் இருந்தன.
இந்நிலையில், தத்துவப் பிரியானந்தா தனது சகோதரியுடன் இணைந்து, பேஸ்புக்கில், புதிய காணொளி ஒன்றை வெளியிட்டார்.
அதில், உயிருக்கு ஆபத்து என நான் கூறியது ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, ஒரு தொலைக்காட்சி சேனலில் நடத்தப்பட்ட தாக்குதலின்போதுதான்.
அது பழைய காணொளி. இதை நித்யானந்தாவுக்கு எதிராக, பேசியதுபோல திசை திருப்பிவிட்டன ஊடகங்கள் என தாறுமாறாக ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி மீண்டும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.