காணாமல் போன கிழக்கு பல்கலை மாணவனின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இன்று பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள பகுதியிலேயே குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மீட்கப்பட்ட ஆணின் சடலம் அண்மையில் காணமல்போன கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் சடலமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இதன்போது வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போன கிழக்கு பல்கலை மாணவனின் சடலம் மீட்பு!

கடந்த 9 ஆம் திகதி காணாமல்போன கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தின் மாணவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மருத்துவபீடத்தில் 01ஆம் ஆண்டு கற்றுவரும் தலவாக்கலை,லிந்துலை பகுதியை சேர்ந்த சி.மோகன்ராஜ் என்னும் மாணவன் இவ்வாறு காணாமல்போயிருந்தார்.

இந் நிலையில் இன்று பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள பகுதியில் குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையாரடியில் உள்ள வளாக விடுதியில் இருந்து சென்றவர் விடுதிக்கு திரும்பாத நிலையில் மாணவர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்ததுது.

இதனடிப்படையில் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவந்த நிலையில் இறுதியாக அவரது கையடக்க தொலைபேசி இணைப்பு கல்லடி பாலத்திற்கருகில் செயற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கபட்டது.

இதனையடுத்து கல்லடி பாலம் அருகிலும் கடற்படை மற்றும் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டிருந்த நிலையில் மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.