தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் பரிதாபமாக பலி- யாழில் சோகம்

தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி சரசாலை தெற்கைச் சேர்ந்த 46 வயதான கந்தையா சத்தியசீலன் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.