கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த காளிஸ்வரன் நந்தகுமார் வயது 24 என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் , குறித்த சடலமானது இரு தினங்களுக்கு முன் நீர்தேக்கத்தில் விழுந்திருக்க கூடுமென சந்தேக வெளியிட்டுள்ள பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.