குளத்தில் குளிக்கச் சென்ற தாய் மற்றும் பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம்! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

புத்தளம் எலுவாங்குளம் இறால்மடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே இன்று செவ்வாய்க்கிழமை (14) மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

வி.சந்திரகுமாரி ( வயது 36), அவரது மகன் ஆர்.கிருஷ்ணகுமார் (வயது 17), அவரது மகள் ஆர்.சுபாஷினி (வயது 19) ஆகிய மூவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதன்போது குறித்த சம்பவத்தில் ஒரு பிள்ளை அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்களினால் காப்பற்றப்பட்டுள்ளார்.

வண்ணாத்திவில்லு பொலிஸார் விரைந்து சென்று பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.