விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 04ம் திகதி மாதிவெல எம்பி உத்தியோகபூர்வ இல்லத்தில் முதல் முறையாக ரஞ்சன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு மறுநாள் பிணை வழங்கப்பட்ட நிலையில் அவர் கடந்த 14ம் திகதி மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சர்ச்சையான குரல்பதிவுகளை அடுத்து அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை இந்த மூன்று நாட்களில் ரஞ்சன் ராமநாயக்க தனது தலைமுடியில் முழுமையாக வெட்டி மொட்டை அடித்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
இந்நிலையில் திருடர்களை பிடிக்க தான் சென்றால் திருடர்கள் தன்னை பிடித்துள்ளதாக ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் எம்பிக்களோ அல்லது ஆதரவாளர்களோ எவரையும் பாராளுமன்ற வளாகத்தில் காணக்கிடைக்காத நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவுடன் மாதிவெல இல்லத்தில் இருக்கும் இருவர் மட்டுமே அங்கு வந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.