48 வினாடிகளில் இலங்கையரின் அபார திறமை! உலக சாதனையாக பதிவு

இலங்கையர் ஒருவர் 48 நொடியில் உலக சாதனை படைத்துள்ளார்.

12 மில்லிமீற்றர் அடர்த்தியான 22 சுருள் கம்பிகளை 48 நொடிகளில் தலையில் வைத்து மடக்கியே அவர் இந்த உலக சாதனை படைத்துள்ளார்.

ஜானக காஞ்சன முதுன்னாயக என்பவர் நேற்று மாலை கண்டி பிரதேசத்தில் வைத்து இந்த உலக சாதனையை படைத்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட பலர் இணைந்திருந்தனர்.

அமெரிக்க நாட்டவரான ஆனேமியன் எடோல்ப் ஒரு வினாடியில் 18 கம்பிகளை மடக்கிய சாதனையை முறியடிப்பதே ஜானக காஞ்சனவின் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.