மற்றுமொரு தடையை நீக்கியது இலங்கை அரசாங்கம்!

ட்ரோன் கமெரா பறக்கவிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் விதிக்கப்பட்ட தடை இன்று முதல் நீக்கப்படுவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் H.M.C நிமல்சிரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு நகரில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடையை சிவில் விமான சேவைகள் அதிகார சபை நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.